Песня Iayyayo (From "Paruthiveeran") в исполнении Manikka Vinayagam - слушать онлайн в хорошем качестве или скачать трек в Mp3 бесплатно на ПК или телефон.
Текст песни Manikka Vinayagam - Iayyayo (From "Paruthiveeran")
ஏலே... ஏலேலே... லே
ஏலே... ஏலேலே... லே
ஒத்த பனை மரத்துல
செத்த நேரம் உம்மடியில்
தல வச்சி சாஞ்சிக்கிறேன்
சங்கதியை சொல்லி தாரேன் வாடி... நீ வாடி
பத்து கன்னு பாலத்துல
மேய்ச்சலுக்கு காத்திருப்பேன்
பாய்ச்சலோட வாடி புள்ள
கூச்சம்கீச்சம் தேவையில்லை வாடி... நீ வாடி
ஏலே... ஏலேலே... லே
ஏலே... ஏலேலே... லே
செவ்வெளனி சின்ன கனி
உன்ன சிறையெடுக்க போறேன் வா நீ
அய்யய்யோ என் உசுருக்குள்ள தீயை வச்சான் அய்யய்யோ
என் மனசுக்குள்ளே நோயை தைச்சான் அய்யய்யோ
சண்டாளி உன் பாசத்தாலே
நானும் சுண்டெலியா ஆனேன் புள்ள
நீ கொன்னா கூட குத்தமில்ல
நீ சொன்னா சாகும் இந்த புள்ள
அய்யய்யோ என் வெக்கம் பத்தி வேகுறதே அய்யய்யோ
என் சமஞ்ச தேகம் சாயுறதே அய்யய்யோ
அரளி விதை வாசக்காரி,ஆள கொல்லும் பாசக்காரி
என் உடம்பு நெஞ்ச கீறி, நீ உள்ள வந்த கெட்டிக்காரி
அய்யய்யோ, என் இடுப்பு வேட்டி இறங்கி போச்சே அய்யய்யோ
என் மீச முறுக்கும் மடங்கி போச்சே அய்யய்யோ
கல்லுக்குள்ள தேரை போல, கலைஞ்சிருக்கும் தாடிக்குள்ள ஒளிஞ்சிக்கவா
கால சுத்தும் நிழலை போல,பொட்ட காட்டில் உங்கூடவே தங்கிடவா
ஐய்யனாரை பாத்தாலே உன் நினைப்பு தாண்டா
அம்மிக்கல்லும் பூப்போல மாறிப்போச்சி ஏண்டா
நான் வாடா மல்லி, நீ போடா அள்ளி
கொரட்டி கண்ணு கருவாச்சியே, நீ தொட்டா அருவா கரும்பாகுதே
கொரட்டி கண்ணு கருவாச்சியே, நீ தொட்டா அருவா கரும்பாகுதே
சண்டாளி உன் பாசத்தால
நானும் சுண்டெலியா ஆனேன் புள்ள
நீ கொன்னா கூட குத்தமில்ல (ஏலே... ஏலேலே)
நீ சொன்னா சாகும் இந்த புள்ள (ஏலே... ஏலேலே)